காமவெறி பிடித்த தாகூர் இளம்பெண் ஒருவளை கற்பழித்ததால், அவள் தற்கொலை செய்துக் கொள்கிறாள். அதற்கு பிறகு தாகூரை அந்த பெண்ணின் பழிதீர்க்கும் ஆவி தீர்த்துக் கட்டியதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். பிறகு தாகூரின் மகனும் அதே போல கொல்லப்படுகிறான். அதே போல தாகூரின் தம்பியும் கொல்லப்படுகிறான். வெளிநாட்டில் இருந்து திரும்பும் தாகூரின் பேரனான குமார் விஜய் சிங்கும் (பிஸ்வஜீத்) அவர்கள் வழியில் மாண்டுபோகிறான்.